Sunday, December 15, 2013

உச்சத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற சுயநல வெறி...





ன்று... நம்மில் பலருக்கும் ,
அவசர அவசரமாக அடுத்தவரைத் தள்ளிவிட்டாவது...
உச்சத்தை அடைந்து விட வேண்டுமென்பதுதான் இலக்கு.

நானா நீயா என்கிற இந்தப் போட்டிமிகு உலகில்,
ஒரு சிலர் மட்டுமே ஏணிக்களை அழகாகவும்,முறையாகவும் வானத்தை நோக்கிப் போடுகிறார்கள்.

பலபேர் வீட்டில் ஏணிக்கள் படுத்த படுக்கையாகவே இருக்கின்றன.

இன்னும் சிலருக்கு...ஏணிக்களை தேடுவதற்குக் கூட நேரமில்லை மட்டுமன்றி புத்தியுமில்லை.

சக மனிதன் தோள் மீது ஏறியாவது உச்சத்தையும் தனக்கான இலக்கையும் அடைந்துவிட வேண்டும் என்கிற அவசரம்...வெறி.

ஏணிகளை விடவும் மலிவான விலையில் மனிதன் இலகுவாகக் கிடைக்கிறான் என்பதற்காக மட்டுமன்றி,

இவர்களது உடம்பு முழுக்க வழிந்தோடும் தெனாவெட்டும் கர்வமுமே...இவர்களை சக மனிதன் தோள் வழியேறச் செய்கிறது.

இப்படியானவர்கள் உச்சத்தில் போய் தள்ளாடுகிறார்கள்... உறுதியாகவோ நிலையாகவோ நிற்க முடியாமல்.

தவிர,இறங்க முயலும்போதும் சடாரென சடசடவெனச் சரிந்துவிடும் அபாயமும் இவர்களுக்கு உண்டு.

முறையாக ஏணி வழியேறியவர்கள், உச்சத்தில் நிதானமாக நின்று...தடுமாறாமல் காரியமாற்றி...அச்சமின்றி அமைதியாக,ஜெயித்த சந்தோசத்தில்... திருப்தியோடு இறங்குகிறார்கள்.

சக மனிதன் கழுத்து வழியே ஏறப் பழகியிருக்கும்.
இல்லை...ஏறிய பின் ஏணியை உதைத்து விடும் போக்கைத்தான், இன்று நம்நாட்டின் பல துறைகளிலும் காண முடிகின்றது.

உச்சத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற சுயநல வெறியில்... தொலைந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனிதம்.

No comments:

Post a Comment