- ஒரு கண்ணோட்டம்!
மர்ஹூம் எம். ஐ. எம் நளீம் ஹாஜியார் நினைவு தினத்தில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் ஆற்றிய உரையைத் தழுவி இக்கட்டுரை எழுதப்படுகிறது.
- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
riskyshareef@gmail.com
எம். எம். ஸுஹைர் ஓர் சிறு அறிமுகம் ;
கொழும்பு, மாளிகாவத்தை மஜ்லிஸ் இஸ்லாமி இளைஞர் அமைப்பின் ஸ்தாபக பொதுச் செயலாளர் (1965- 73), புதுமைக் குரல் மாதாந்த சஞ்சிகையின் இயக்குநர், பாமிஸ் அமைப்பின் தலைவர், பத்திரிகையாளர், உச்ச நீதிமன்ற சட்டத்தரணி, அரச சிரேஷ்ட சட்டத்தரணி, ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர், ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் (2004/2006), ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் (2006/2012), சூறா சபையின் நிகழ்கால உப தலைவர், இலங்கை முஸ்லிம் சமூகத்துக்காக காத்திரமான பங்களிப்பை நல்கிய சிறந்த புத்திஜீவி, கல்வியாளர், சமூக சேவையாளர் என பல முகங்களைக் கொண்டவர் எம்.எம். ஸுஹைர். (தலைமையுரையில் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி)
இலங்கை வாழ் முஸ்லிம்களிடத்தில், தனக்கெனவோர் தனியான அதேநேரம் என்றென்றும் அழியாத இடம்பிடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் மதிப்புக்குரிய மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள்.
என்றும், நன்றியோடு நினைவு கூரப்படக்கூடிய நல் நெஞ்சுக்குச் சொந்தக்காரர். .
இஸ்லாமியக் கல்விப் புரட்சிக்கு வித்திட்டு, மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தந்தை. இஸ்லாமிய வரலாற்றுத் தொகுப்புக்கு அழியா வரம் பெற்றுத் தந்து, தேசிய பங்களிப்பில் தனது தடத்தையும், முத்திரையையும் பதித்த அபூர்வமான அற்புத மனிதர்.
ஜாமியா நளீமிய்யா, இக்ரஹ் கல்விக்கூடங்களை அழியாச் சொத்தாக இலங்கை முஸ்லிம்களுக்காக ஸ்தாபித்து விட்டுச்சென்ற இந்த மகோன்னத புருஷர், மர்ஹூம் சித்தி லெப்பை காலம் முதல் இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கும் பலரில் முதன்மையானவர் என்பது மிகைப்படுத்தப்பட்டதொன்றல்ல.
இப்படி, இலங்கை முஸ்லிம்களுக்கான உதாரண புருஷராக வாழ்ந்து மறைந்தும், சகல மனசுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் மர்ஹூம் நளீம் ஹாஜியார்.
கடந்த காலமொன்றில்
இறந்து போனதாகச் சொல்கிறார்கள்….
நிகழ்காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும்
கல்வித் தந்தையை.
எதிர்காலத்திலும் வாழும் வரம்பெற்ற
அவரை எப்படிச் சொல்ல முடியும்?
வெறுமனே இறந்துபோன மனிதரென்று?
ஒரு உதாரண புருஷர் என்கிற அங்கீகார அடையாளமே இதுதானே.
2005 செப்டம்பர் 28ஆம் திகதி, கொழும்பு, ரண்முத்து ஹோட்டலில் வாழ்வோரை வாழ்த்தும் கூட்டமொன்றுக்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. வாழ்த்தப்படயிருந்தவரில் முதன்மையான அந்தஸ்த்துக்குரியவராக இருந்தவர் நளீம் ஹாஜியார்.
அன்றைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாதான் பிரதான பேச்சாளர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபாவும், நானும் சிறப்பதிதிகள்.
ஆனால், அதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே காற்று அழுதழுது எடுத்து வருகிறது அந்தச் சோகச் செய்தியை. இலங்கை வாழ் முஸ்லிம்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய அந்தச் செய்தி, நளீம் ஹாஜியார் வபாத் என்பதுதான்.
ஜனாஸா முன் நின்று கதறியழும் பழக்கமோ, வழக்கமோ முஸ்லிம்களிடம் இல்லை. இருந்திருந்தால்… ஜனாஸா நல்லடக்கத்துக்காக ஒன்று திரண்டிருந்த முஸ்லிம்கள் அல்லோலகல்லோலப்பட்டிருப்பர்.. அந்தளவில், அவரிழப்பைச் சொல்வதற்கான வார்த்தை வலுவற்றதாக இருக்கின்றமை என்பது யதார்த்தம்.
பேருவளை, சீனங்கோட்டையில் நளீம் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, ஏலவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி, ரண்முத்து ஹோட்டலின் வாழ்த்துக் கூட்டம் அவருக்கான அனுதாபக் கூட்டமாக தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
நளீம் ஹாஜியார், சாதாரண குடும்பமொன்றில் பிறந்து, இரத்தினக்கல் பட்டை தீட்டுபவராக தனது தொழிலை ஆரம்பித்தவர். பின்னாளில் பிரதான வரிசை இரத்தினக்கல் வர்த்தகராக உயர்ந்து, அத்துறையில் சிகரத்தைத் தொடுமளவில் அவருக்கு இறைவனின் அருள் கிட்டியிருக்கிறது.
பணமும், வசதியும், சுகபோகங்களும், செளகரியங்களும் எத்தனை வந்தபோதும் அன்றும் சாதாரண மட்டத்திலான வாழ்க்கை வாழ்ந்தவர் நளீம் ஹாஜியார்.
அவர் உழைத்த பணத்தையும், செல்வத்தையும் எப்போதுமே வெளிநாடுகளிலேயோ இல்லை சுவிஸ் வங்கியிலேயோ முடக்கியது கிடையாது. அவுஸ்திரேலியாவில் பங்களாக்களை வாங்கிப் போட்டது கிடையாது. ஹாங்காங் மற்றும் பாங்கொக்களில் வீணடித்தது கிடையாது.
இறைவன் கூரையைப் பிய்த்துக் கொண்டு வழங்கிய செல்வமாக, இவரிடத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட…..நாட்டுக்கும், சட்டத்துக்கும் புறம்பாக இவர் வெளிநாடுகளில் எங்கேயாவது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பாரோ என்கிற சந்தேகம் அரசாங்கத்துக்கும் அப்போது முளைவிட ஆரம்பித்திருந்தது.
விளைவு, 1974ல் அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுனில் சில்வா தலைமையில் இவருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது. மட்டுமன்றி, ரகசியப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கொழும்புக்கு அழைத்து வந்து தொடர்ந்து 47 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கிறார்கள். இரவு பகலான விசாரணை.
முடிவில், எவருமே இவர்மீது குற்றம் காண இயலாத நிலையில், நாட்டுக்குத் துரோகம் செய்தார் என்று எவருமே அரசாங்கம் உட்பட விரல் நீட்டமுடியாத அளவில், வழக்குகள் ஏதுமின்றி நிரபராதியாக வெளியே வருகிறார் நளீம் ஹாஜியார். அவரது நேர்மைமீது தேசத் துரோக முத்திரை குத்த விளைந்த அரசுக்கே இச்சம்பவம் ஒரு தலைகுனிவுதான்.
அதன்பிறகு, இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சியை அடிப்படையாக வைத்து ஜாமியா நளீமிய்யா பல்கலைக்கழகம், இக்ரஹ் தொலில்நுட்பக கல்லூரிகளை இவர் அமைத்தது மட்டுமன்றி, தனது மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊடாக, இலங்கை முஸ்லிம்களின் சமூக எழுச்சி கருதி, தேசியப் பங்களிப்பில் முஸ்லிம்களின் நிலைமை தொடர்பிலான ஆவணங்களையும், பொக்கிஷங்களையும் பாதுகாக்கும் மற்றும் திரட்டும் பணியில் இவர் தன்னை வெகு சிரத்தையோடு ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
1984ல் இது தொடர்பில் மாபெரும் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்கள் தேசிய ரீதியாக இந்நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பு இருட்டடிப்புச் செய்யப்பட்டு, வரலாற்று ஆதாரங்களும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு வரும் இந் நிகழ்காலச் சூழ்நிலையில் மற்றும் இனவாதம் புரையோடிப் போயிருக்கும் இக்காலகட்டத்தில், இன்றும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் ரகசியமானதும் மறைக்கப்பட்டதுமான சரித்திரத்தை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்த ஆவணப் பொக்கிஷங்கள் ஆவனப்படுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக நளீம் ஹாஜியார் திகழ்ந்தார் என்பது எவராலும், எப்போதும் மறுதலிக்க முடியாதது.
ஆசியா மற்றும் இலங்கையை 500 வருடங்களுக்கு மேல் ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்களும், போர்த்துக்கேயர்களும், ஒல்லாந்தர்களும் இங்கிருந்த வளங்களைச் சுரண்டிச் சென்றமை என்பது வரலாறு.
லண்டன், லிஸ்பன் மற்றும் அம்ஸ்டடாம் நகரின் கட்டடங்களில்கூட ஆசிய நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருப்பதை இன்றும் அவதானிக்கலாம்.
இந்நிலையில், 1300 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்நாட்டைச் சுரண்டவோ, சூறையாடவோ இல்லை. இந்நாட்டு வளங்களை முஸ்லிம்கள் எங்கும் எடுத்துச் சென்றதுமில்லை. இலங்கை தேசத்துக்கு நிரந்தரமாக நின்று சேவையாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர்கள்தான் இலங்கை முஸ்லிம்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களால், அதுவும் மாற்றுமத ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டதொன்று,
அப்படிப்பட்ட தெளிவான சரித்திரம் இலங்கை முஸ்லிம்களுடையது. இதற்கு சிறந்த உதாரண புருஷர்தான் மர்ஹூம் நளீம் ஹாஜியார்.
இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் கிளையொன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதாக, கடந்த செப்டம்பர் 06ஆம் திகதி யூதர்களின் பின்னணியில் இயங்கும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் சீ.என்.என், (இதுவும் யூத நிறுவனமே) அமெரிக்காவில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வினவியபோது, நரேந்திர மோடி அக்கருத்தை முற்றாக மறுத்தார்.
இது வெறும் கற்பனை. இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் பிறந்து, இந்தியாவுக்காக வாழ்ந்து, இந்தியாவுக்காகவே மரணிப்பவர்கள் என்று நரேந்திர மோடி இந்திய முஸ்லிம்கள் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வலுக்கட்டாய செய்தி உருவாக்கத்தின் பின்னணியில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான சதி வலையைப் பின்ன முயன்றது அமெரிக்கா என்று பின்னாளில் தெரியவந்தது
அமெரிக்கா – இந்தியாவுக்கிடையில் நிலவிய கடந்த 10 வருடகால பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தமொன்று காலாவதியாகும் நிலையில், அதை மீளப் புதிப்பிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.
இது தொடர்பில், கடந்த செப்டம்பர் 23, 24, 25ஆம் திகதிகளில் அமெரிக்கா – இந்தியாவுக்கு இடையில் நிவ்யோர்க்கில் ஒரு கலந்தாலோசனை மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி, பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் 10 வருடங்களுக்கு புதுப்பிக்க நினைத்திருக்கும் அமெரிக்கா, இதன் மூலம் இந்திய கூட்டுறவோடு, மிக வீரியம்மிக்க 33 வகையான ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலையொன்றை இந்தியாவில் நிறுவ முனைப்புக் காட்டுகிறது.
இதில் தலா ஒரு உற்பத்திக்கு அமெரிக்கா முதலீடு செய்யப்போகும் தொகை 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இதற்காக, இந்தியாவின் 150 மில்லியன் முஸ்லிம்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்கள் தீவிரவாதிகள் என்று, ஒரு கற்பனைச் சித்திரத்தை வடிவமைத்து தனது இலக்கை அடைந்து கொள்ள அமெரிக்கா முயற்சித்திருக்கிறது.
எண்ணெய்க்காக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் யுத்தங்களை உருவாக்கி விட்டுக் குளிர் கய்ந்த்தது போன்ற அமெரிக்காவின் இன்னோர் தந்திரோபாயமே இது.
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய பரிதாப நிலைமையும் இதுதான். சில வெளிநாட்டுச் சக்திகளின் பின்னணியில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் இன்று இங்கேயும் இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறது.
பொதுபலசேனா, சுகததாச உள்ளரங்கில் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மியன்மாரின் தீவிரவாதத் துறவி அசின் விராது இதற்கு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.
5000 பெளத்த துறவிகள் அளவில் பங்கேற்ற இந்த மாநாட்டில், பொதுபலசேனா பேச்சாளர் பேராசிரியர் சமில லியனகே ஆற்றிய உரையில் முஸ்லிம்களின் தேசியத்துக்கான பங்கும் உழைப்பும் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
1551ல் கோட்டையை ஆண்டு கொண்டிருந்த டொன் ஜுவான் தர்மபால, இலங்கையை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த போர்த்துக்கேயர்களின் தூண்டுதலில், ( போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்த 46ஆவது வருடம்) டொன் ஜுவான் கத்தோலிக்க மதத்தினைத் தழுவினார்.), அப்போதைய சீதாவக்கயை ஆட்சி செய்து கொண்டிருந்த மாயாதுன்னவை விரட்டியடிப்பதற்காகச் சென்ற வரலாற்றை சம்பூரணப்படுத்திக் கூறவில்லை.
வழிதவறிய ஒரு சிங்களப் படையினரே மாயாதுன்னவை விரட்டியடிக்கச் சென்றதாகவும், அதற்கு அப்பால் வரலாற்றின் உண்மைத் தன்மையை விளங்கப்படுத்த முயலாமல் அத்துடன் அவர் தனது உரையையும் நிறைவு செய்துகொண்டிருந்தார்.
இலங்கையில் இருந்து போர்த்துக்கேயர்களை விரட்டியடிக்க நெடுகாலம் போராடிய, மற்றும் முஸ்லிம்களின் பெருத்த ஆதரவோடு தேசத்தைக் காக்க உழைத்த தேசிய வீரர் மாயாதுன்னவின் உண்மை முகத்தையும், முஸ்லிம்களின் மாபெரும் பங்களிப்பையும் சித்தரிக்காமல் மலுங்கடித்திருக்கிறார் சமில லியனகே.
டொன் ஜுவான் தர்மபால போர்த்துக்கேயருக்கு விலை போனதையோ, அல்லது வழிதவறிய சிங்களப்படை தாக்கியழிக்கப் புறப்பட்டது தேசத்தைக் காக்கப் போராடியதோர் உண்மையான வீர மன்னன் மாயாதுன்னை என்பதையோ, அல்லது மிகுந்த தேசப்பற்றுடன் நாட்டை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு மாயாதுன்னையுடன் இணைந்து போராடிய அன்றைய முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு பற்றியோ சமில லியனகே கடைசிவரைக்கும் சொல்லவேயில்லை.
பொதுபலசேனா மேடைகளில் முஸ்லிம்கள் சார்பு யதார்த்தங்களும் உண்மைகளும் அண்மைக்காலங்களில் இப்படித்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
போர்த்துக்கேயர்களை இலங்கையை விட்டு விரட்டுவதற்காக, இலங்கை முஸ்லிம்களின் உதவியோடு மாயாதுன்னை அபோதைய கேரள சமோரிஸ் கலிகத் அரசரின் உதவியை நாடியதையோ, இல்லை அவர் மூன்று முஸ்லிம் தளபதிகளின் கீழ் ஒரு ஆயுதப்படையை (இராணுவம் என்று சொல்லுமளவில் பலம் பெற்றதல்ல) இலங்கைக்கு அனுப்பி வைத்ததையோ சமில லியனகே தனது உரையில் குறிப்பிடவில்லை. மட்டுமன்றி அதிக வரலாற்றுப் புத்தகங்களிலும் இதுபற்றி எழுதப்படவில்லை.
ஆயினும், அண்மையில் இயற்கையெய்திய வரலாற்றுப் பேராசிரியர் மட்டுமன்றி பெளத்த மதத்தைச் சார்ந்தவரான லோர்னா தேவராஜா இதுபற்றி தனது ஆய்வுப் புத்தகத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை வரலாற்றில் மாயாதுன்னை முஸ்லிம்களோடு தேசத்துக்காகப் போராடியவர் என்பதும், டொன் ஜுவான் தர்மபால சிங்களப் படையுடன் ஒன்று சேர்ந்து மாயாதுன்னவை அழிக்கப் புறப்பட்டவர் என்பது பல இடங்களில் இன்று மறுக்கப்பட்டாலும், முஸ்லிம்கள் மாயாதுன்னையுடன் இந்த தேசத்துக்காக உழைத்தவர்கள் என்பதும், முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுமிக்க சமூகம் என்பதும் நிரூபிக்கப்பட்டதொன்று.
இலங்கை சரித்திரத்தை உற்று அவதானிக்கும்போது, இந்நாட்டில் முஸ்லிம்கள் தேசப்பற்றுமிக்க கண்ணியவான்களாக வாழ்ந்திருப்பதை அவதானிக்க முடியும்.
ஜாமியா நளீமிய்யாவில் 1984ல் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற 05 நாள் ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் இது தொடர்பில் 1986ல் கலாநிதி சுக்ரியினால் தொகுத்து வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல் என்பனவும்,
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.சீ.எஸ் ஹமீட்டின் அயராத முயற்சியின் விளைவாக, 1994ல் பேராசிரியர் லோர்னா தேவராஜா எழுதி வெளியிட்ட இலங்கை முஸ்லிம்களும் 1000 வருட இன ஒற்றுமையும் என்ற புத்தகமும்,
கலாநிதி எஸ்.எச்.எம்.ஜெமீல் எழுதிய இலங்கை பாராளுமன்றில் முஸ்லிம்கள் என்ற நூல் மற்றும் லத்தீப் பாரூக் போன்றவர்களால் வெளியிடப்பட்டுவரும் ஆய்வுகள் இவற்றை மேலும் வலுப்படுத்துகின்றன.
தேசிய சரித்திரத்தில் பங்காற்றிய முஸ்லிம்கள் பற்றி மேலும் ஆராய விரும்புபவர்களுக்கு இவை சிறந்த உசாத்துணை நூல்களாக அமையும் என்பது திண்ணம்.
இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன ரீதியான சவால்களுக்கு பதில் கொடுக்ககூடிய ஆதாரங்களை மேற்படி புத்தகங்கள் உள்ளடக்கியுள்ளன. முஸ்லிம் சமூகம் இலங்கையை சூறையாட வந்தவர்கள் அல்ல: முஸ்லிம் சமூகம் கெளரவமான சமூகம் என்பதை இந்த ஆவனங்கள் மேலும் நிரூபிக்கின்றன.
மர்ஹூம் நளீம் ஹாஜியார் வெகு தூரநோக்குடன் சிந்தித்துச் செயற்பட்டதாலேயே அவரால் இப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க முடிந்தது.
ஜாதிக ஹெல உறுமயின் பேச்சாளர்கள், முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்து வெறும் 05 நூற்றாண்டுகள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் செயலாளர் கே.ஜே.விஜேதாச முஸ்லிம்கள் இந்நாட்டில் குடியேறி 07 நூற்றாண்டுகள் என்று அண்மைய ஞாயிறு பத்திரிகையொன்றில் எழுதியிருந்தார். உண்மை என்ன?
பிரபல சரித்திரப் பேராசிரியர் சில்வா கிரிபம்புவ, முஸ்லிம்கள் 600 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்நாட்டுக்கு வந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைய சூனியமான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்கள் பெருத்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளிவாயல்கள் உடைபடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. ஆக, முஸ்லிம்கள் இன்று பெரும்பான்மையினருடன் மிக அந்நியோன்னியமாகப் பழகி, அவர்களுக்கு தெளிவையும், உண்மையையும் ஊட்ட வேண்டியவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.
13ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டு இராணுவத்தில் அதிகம் உள்வாங்கப்பட்டிருந்ததாகவும், தற்போதைய இராணுவத்தில் முஸ்லிம்கள் குறிப்பிடக்கூடிய அளவு உள்வாங்கப்படவில்லை என்றும் குறை சொல்லப்படுகிறது.
இப்படி…. இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ராஜதந்திர விடயதானங்கள் மற்றும் உறவுகள், ஏற்றுமதி, இறக்குமதி, உள்ளூர் உற்பத்தித் துறைகளிலெல்லாம் ஆரம்ப காலம் முதல் முஸ்லிம்களும், மேமன் சமூகமும் அதிகம் ஈடுபட்டிருந்ததாக பேராசிரியர் லோர்னா தேவராஜா குறிப்பிட்டுள்ளார்.
12ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து 07 நெசவுத் தொழிலாளர்களை அழைத்து வந்து, இலங்கை தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்ததாகவும், அவர்களின் சந்ததியினர் இன்றும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் லோர்னா தேவராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று விவசாயத் துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய தேசிய பங்களிப்பு குறித்தும் பல ஆதாரங்கள் உள்ளன.
ஐந்தாம் நூற்றாண்டில் மன்னன் தாதுசேனவினால் கட்டப்பட்ட யோத வாவி, (முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு வந்து 300 வருடங்களுக்குப் பிறகும் நல்ல நிலைமயில் இருந்ததாகவும், முஸ்லிம்களே வெகு சிரத்தையோடு அதைப் பேணிப் பாதுகாத்ததாகவும் இலங்கையின் மூன்றாவது நீதியரசர் சேர்.அலெக்ஷாண்டர் ஜொன்ஸ்டன் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (இது 1200 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு).
நான் ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கடந்த 2008ல், பின் தங்கிய இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பிரதேச விவசாய நலன் கருதி, 450 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 25000 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் மற்றும் 110 மெ.மின்சாரத்தை ஈரானிடமிருந்து பெற்றுக் கொடுத்ததையும் இங்கு நினைவூட்டுவதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். அன்று மட்டுமன்றி இன்றும் இலங்கை முஸ்லிம்கள் தேசிய ரீதியாக தமது பங்களிப்புக்களை ஆற்றியே வருகின்றனர் என்பதை ஞாபகப்படுத்தவே இதை இங்கு குறிப்பிடுகின்றேன்.
மட்டுமன்றி, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு உட்பட்ட பல முஸ்லிம் நாடுகள் இலங்கையின் வளர்ச்சியும் நலனும் கருதி இன்றும் உதவிகள் செய்து வருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இதேபோன்று, இலங்கையின் சட்ட மற்றும் சட்டவாக்கத்துறையிலும் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்கு இலங்கையின் முதலாவது உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.ரீ.அக்பர் ஒரு உதாரண புருஷராகத் திகழ்கிறார்.
இலங்கையின் குற்றவியல் சட்டம் உட்பட்ட அரச ஊழியர் ஓய்வூதிய சட்டத்தைத் தயாரித்த நீதியரசர் அக்பர், இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்கிறதோர் பிரச்சினை முளைவிட்ட சமயம், அதற்கென அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைமை வகித்து, பேராதெனியவில் முதல் பல்கலைக்கழகம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) அமைக்க அரும் பாடுபட்டவர். இன்றும் பேராதனைப் பல்கலையில் அமையப்பெற்றிருக்கும் அக்பர் மண்டபம் அவர் பெயரை ஞாபகப்படுத்துகிறது.
இதேபோன்றுதான், பாப்புச்சி மரிக்காரும் இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிகு கட்டடங்களை அமைத்து தேசியத்துக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார். கொழும்பு அருங்காட்சியகம், பொது தபாலகம், காலிமுகத்திடலின் ‘கோல்ஃபேஷ் ஹோட்டல்’, விக்டோரியா என்பன இவரது கட்டடக்கலைப் பங்களிப்புக்கான சாட்சியங்கள்.
கட்டடக் கலையில் முஸ்லிம்கள்தான் முன்னணியில் இருந்தார்கள் என்பதற்கு எவரும் மறுதலிக்க முடியாத அளவில் நிரம்ப ஆதாரங்கள் உள்ளன. இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவின் புதிடில்லி முதல் சென்னை வரைக்குமான அழகான, கம்பீரமான கட்டடங்களை அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான்.
அத்துடன், 20ஆம் நூற்றாண்டில் இலங்கை தேசியத்துக்கான அறிஞர்களின் பங்களிப்பு தொடர்பில் ஒராபி பாஷா, நீதியரசர் எம்.ரீ.அக்பர். அறிஞர் சித்தி லெவ்வை, ஏ.எம்.ஏ.அசீஸ் ஆகியோரை ஈண்டு குறிப்பிடலாம்.
இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பில் பேசும்போது, கலாநிதி ரீ.பீ.ஜாயா, சேர்.ராசிக் பரீத், டாக்டர் எம்.சீ.எம்.கலீல், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஏ.சீ.எஸ்.ஹமீத் ஆகியோரை முன்னிலைப்படுத்தலாம்
இலங்கை தேசியத்துக்கான முஸ்லிம் தனவந்தர்களின் பங்களிப்பு எனும்போது, அப்துர் ரகுமான், பாப்புச்சி மரிக்கார், அப்துல் கபூர், மாக்கான் மாக்கார், நளீம் ஹாஜியார் மற்றும் மேமன் சமூகம் உட்பட்ட பலரை முதன்மைப்படுத்திக் குறிப்பிடலாம்.
ஆக, இலங்கையின் தேசியத்துக்கு பல்துறைகளிலும் முஸ்லிம்கள் பெயர் குறிப்பிடக்கூடிய அளவில், கெளரவமாகவும், கண்ணியமாகவும் தமது பங்களிப்புக்களை ஆற்றியிருப்பது நிரூபிக்கப்பட்ட விடயம்.
பொதுபலசேனாக்களும், சிங்கள அடிப்படைவாத மற்றும் பேரினவாத அமைப்புக்களும் குற்றம் சுமத்தும் அளவில்,இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவில் நடந்து கொண்டவர்களுமல்லர்.
1962ல் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கத்தோலிக்கப் பின்னணி சதி முயற்சியின்போதும் சரி, 1972 தென்னிலங்கை சிங்கள இளைஞர் புரட்சியின்போதும்சரி, 1989 தென்னிலங்கை சிங்கள பயங்கரவாத அட்டகாசத்தின்போதும் சரி,1976 துவக்கம் 2009 காலப்பகுதி வரைக்குமான தமிழீழ விடுதலைப் புலிகளின் நாட்டைப் பிரிக்கும் போராட்டத்தின்போதும் சரி முஸ்லிம்கள் இந்நாட்டின் ஜனாநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதில்லை என்பதே யதார்த்தமாகும். ((நிறைவு)
எதிர்காலத்திலும் வாழும் வரம்பெற்ற
அவரை எப்படிச் சொல்ல முடியும்?
வெறுமனே இறந்துபோன மனிதரென்று?
ஒரு உதாரண புருஷர் என்கிற அங்கீகார அடையாளமே இதுதானே.
2005 செப்டம்பர் 28ஆம் திகதி, கொழும்பு, ரண்முத்து ஹோட்டலில் வாழ்வோரை வாழ்த்தும் கூட்டமொன்றுக்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. வாழ்த்தப்படயிருந்தவரில் முதன்மையான அந்தஸ்த்துக்குரியவராக இருந்தவர் நளீம் ஹாஜியார்.
அன்றைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாதான் பிரதான பேச்சாளர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபாவும், நானும் சிறப்பதிதிகள்.
ஆனால், அதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே காற்று அழுதழுது எடுத்து வருகிறது அந்தச் சோகச் செய்தியை. இலங்கை வாழ் முஸ்லிம்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய அந்தச் செய்தி, நளீம் ஹாஜியார் வபாத் என்பதுதான்.
ஜனாஸா முன் நின்று கதறியழும் பழக்கமோ, வழக்கமோ முஸ்லிம்களிடம் இல்லை. இருந்திருந்தால்… ஜனாஸா நல்லடக்கத்துக்காக ஒன்று திரண்டிருந்த முஸ்லிம்கள் அல்லோலகல்லோலப்பட்டிருப்பர்.. அந்தளவில், அவரிழப்பைச் சொல்வதற்கான வார்த்தை வலுவற்றதாக இருக்கின்றமை என்பது யதார்த்தம்.
பேருவளை, சீனங்கோட்டையில் நளீம் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, ஏலவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி, ரண்முத்து ஹோட்டலின் வாழ்த்துக் கூட்டம் அவருக்கான அனுதாபக் கூட்டமாக தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
நளீம் ஹாஜியார், சாதாரண குடும்பமொன்றில் பிறந்து, இரத்தினக்கல் பட்டை தீட்டுபவராக தனது தொழிலை ஆரம்பித்தவர். பின்னாளில் பிரதான வரிசை இரத்தினக்கல் வர்த்தகராக உயர்ந்து, அத்துறையில் சிகரத்தைத் தொடுமளவில் அவருக்கு இறைவனின் அருள் கிட்டியிருக்கிறது.
பணமும், வசதியும், சுகபோகங்களும், செளகரியங்களும் எத்தனை வந்தபோதும் அன்றும் சாதாரண மட்டத்திலான வாழ்க்கை வாழ்ந்தவர் நளீம் ஹாஜியார்.
அவர் உழைத்த பணத்தையும், செல்வத்தையும் எப்போதுமே வெளிநாடுகளிலேயோ இல்லை சுவிஸ் வங்கியிலேயோ முடக்கியது கிடையாது. அவுஸ்திரேலியாவில் பங்களாக்களை வாங்கிப் போட்டது கிடையாது. ஹாங்காங் மற்றும் பாங்கொக்களில் வீணடித்தது கிடையாது.
இறைவன் கூரையைப் பிய்த்துக் கொண்டு வழங்கிய செல்வமாக, இவரிடத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட…..நாட்டுக்கும், சட்டத்துக்கும் புறம்பாக இவர் வெளிநாடுகளில் எங்கேயாவது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பாரோ என்கிற சந்தேகம் அரசாங்கத்துக்கும் அப்போது முளைவிட ஆரம்பித்திருந்தது.
விளைவு, 1974ல் அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுனில் சில்வா தலைமையில் இவருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது. மட்டுமன்றி, ரகசியப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கொழும்புக்கு அழைத்து வந்து தொடர்ந்து 47 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கிறார்கள். இரவு பகலான விசாரணை.
முடிவில், எவருமே இவர்மீது குற்றம் காண இயலாத நிலையில், நாட்டுக்குத் துரோகம் செய்தார் என்று எவருமே அரசாங்கம் உட்பட விரல் நீட்டமுடியாத அளவில், வழக்குகள் ஏதுமின்றி நிரபராதியாக வெளியே வருகிறார் நளீம் ஹாஜியார். அவரது நேர்மைமீது தேசத் துரோக முத்திரை குத்த விளைந்த அரசுக்கே இச்சம்பவம் ஒரு தலைகுனிவுதான்.
அதன்பிறகு, இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சியை அடிப்படையாக வைத்து ஜாமியா நளீமிய்யா பல்கலைக்கழகம், இக்ரஹ் தொலில்நுட்பக கல்லூரிகளை இவர் அமைத்தது மட்டுமன்றி, தனது மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊடாக, இலங்கை முஸ்லிம்களின் சமூக எழுச்சி கருதி, தேசியப் பங்களிப்பில் முஸ்லிம்களின் நிலைமை தொடர்பிலான ஆவணங்களையும், பொக்கிஷங்களையும் பாதுகாக்கும் மற்றும் திரட்டும் பணியில் இவர் தன்னை வெகு சிரத்தையோடு ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
1984ல் இது தொடர்பில் மாபெரும் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்கள் தேசிய ரீதியாக இந்நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பு இருட்டடிப்புச் செய்யப்பட்டு, வரலாற்று ஆதாரங்களும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு வரும் இந் நிகழ்காலச் சூழ்நிலையில் மற்றும் இனவாதம் புரையோடிப் போயிருக்கும் இக்காலகட்டத்தில், இன்றும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் ரகசியமானதும் மறைக்கப்பட்டதுமான சரித்திரத்தை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்த ஆவணப் பொக்கிஷங்கள் ஆவனப்படுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக நளீம் ஹாஜியார் திகழ்ந்தார் என்பது எவராலும், எப்போதும் மறுதலிக்க முடியாதது.
ஆசியா மற்றும் இலங்கையை 500 வருடங்களுக்கு மேல் ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்களும், போர்த்துக்கேயர்களும், ஒல்லாந்தர்களும் இங்கிருந்த வளங்களைச் சுரண்டிச் சென்றமை என்பது வரலாறு.
லண்டன், லிஸ்பன் மற்றும் அம்ஸ்டடாம் நகரின் கட்டடங்களில்கூட ஆசிய நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருப்பதை இன்றும் அவதானிக்கலாம்.
இந்நிலையில், 1300 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்நாட்டைச் சுரண்டவோ, சூறையாடவோ இல்லை. இந்நாட்டு வளங்களை முஸ்லிம்கள் எங்கும் எடுத்துச் சென்றதுமில்லை. இலங்கை தேசத்துக்கு நிரந்தரமாக நின்று சேவையாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர்கள்தான் இலங்கை முஸ்லிம்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களால், அதுவும் மாற்றுமத ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டதொன்று,
அப்படிப்பட்ட தெளிவான சரித்திரம் இலங்கை முஸ்லிம்களுடையது. இதற்கு சிறந்த உதாரண புருஷர்தான் மர்ஹூம் நளீம் ஹாஜியார்.
இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் கிளையொன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதாக, கடந்த செப்டம்பர் 06ஆம் திகதி யூதர்களின் பின்னணியில் இயங்கும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் சீ.என்.என், (இதுவும் யூத நிறுவனமே) அமெரிக்காவில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வினவியபோது, நரேந்திர மோடி அக்கருத்தை முற்றாக மறுத்தார்.
இது வெறும் கற்பனை. இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் பிறந்து, இந்தியாவுக்காக வாழ்ந்து, இந்தியாவுக்காகவே மரணிப்பவர்கள் என்று நரேந்திர மோடி இந்திய முஸ்லிம்கள் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வலுக்கட்டாய செய்தி உருவாக்கத்தின் பின்னணியில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான சதி வலையைப் பின்ன முயன்றது அமெரிக்கா என்று பின்னாளில் தெரியவந்தது
அமெரிக்கா – இந்தியாவுக்கிடையில் நிலவிய கடந்த 10 வருடகால பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தமொன்று காலாவதியாகும் நிலையில், அதை மீளப் புதிப்பிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.
இது தொடர்பில், கடந்த செப்டம்பர் 23, 24, 25ஆம் திகதிகளில் அமெரிக்கா – இந்தியாவுக்கு இடையில் நிவ்யோர்க்கில் ஒரு கலந்தாலோசனை மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி, பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் 10 வருடங்களுக்கு புதுப்பிக்க நினைத்திருக்கும் அமெரிக்கா, இதன் மூலம் இந்திய கூட்டுறவோடு, மிக வீரியம்மிக்க 33 வகையான ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலையொன்றை இந்தியாவில் நிறுவ முனைப்புக் காட்டுகிறது.
இதில் தலா ஒரு உற்பத்திக்கு அமெரிக்கா முதலீடு செய்யப்போகும் தொகை 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இதற்காக, இந்தியாவின் 150 மில்லியன் முஸ்லிம்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்கள் தீவிரவாதிகள் என்று, ஒரு கற்பனைச் சித்திரத்தை வடிவமைத்து தனது இலக்கை அடைந்து கொள்ள அமெரிக்கா முயற்சித்திருக்கிறது.
எண்ணெய்க்காக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் யுத்தங்களை உருவாக்கி விட்டுக் குளிர் கய்ந்த்தது போன்ற அமெரிக்காவின் இன்னோர் தந்திரோபாயமே இது.
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய பரிதாப நிலைமையும் இதுதான். சில வெளிநாட்டுச் சக்திகளின் பின்னணியில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் இன்று இங்கேயும் இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறது.
பொதுபலசேனா, சுகததாச உள்ளரங்கில் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மியன்மாரின் தீவிரவாதத் துறவி அசின் விராது இதற்கு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.
5000 பெளத்த துறவிகள் அளவில் பங்கேற்ற இந்த மாநாட்டில், பொதுபலசேனா பேச்சாளர் பேராசிரியர் சமில லியனகே ஆற்றிய உரையில் முஸ்லிம்களின் தேசியத்துக்கான பங்கும் உழைப்பும் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
1551ல் கோட்டையை ஆண்டு கொண்டிருந்த டொன் ஜுவான் தர்மபால, இலங்கையை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த போர்த்துக்கேயர்களின் தூண்டுதலில், ( போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்த 46ஆவது வருடம்) டொன் ஜுவான் கத்தோலிக்க மதத்தினைத் தழுவினார்.), அப்போதைய சீதாவக்கயை ஆட்சி செய்து கொண்டிருந்த மாயாதுன்னவை விரட்டியடிப்பதற்காகச் சென்ற வரலாற்றை சம்பூரணப்படுத்திக் கூறவில்லை.
வழிதவறிய ஒரு சிங்களப் படையினரே மாயாதுன்னவை விரட்டியடிக்கச் சென்றதாகவும், அதற்கு அப்பால் வரலாற்றின் உண்மைத் தன்மையை விளங்கப்படுத்த முயலாமல் அத்துடன் அவர் தனது உரையையும் நிறைவு செய்துகொண்டிருந்தார்.
இலங்கையில் இருந்து போர்த்துக்கேயர்களை விரட்டியடிக்க நெடுகாலம் போராடிய, மற்றும் முஸ்லிம்களின் பெருத்த ஆதரவோடு தேசத்தைக் காக்க உழைத்த தேசிய வீரர் மாயாதுன்னவின் உண்மை முகத்தையும், முஸ்லிம்களின் மாபெரும் பங்களிப்பையும் சித்தரிக்காமல் மலுங்கடித்திருக்கிறார் சமில லியனகே.
டொன் ஜுவான் தர்மபால போர்த்துக்கேயருக்கு விலை போனதையோ, அல்லது வழிதவறிய சிங்களப்படை தாக்கியழிக்கப் புறப்பட்டது தேசத்தைக் காக்கப் போராடியதோர் உண்மையான வீர மன்னன் மாயாதுன்னை என்பதையோ, அல்லது மிகுந்த தேசப்பற்றுடன் நாட்டை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு மாயாதுன்னையுடன் இணைந்து போராடிய அன்றைய முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு பற்றியோ சமில லியனகே கடைசிவரைக்கும் சொல்லவேயில்லை.
பொதுபலசேனா மேடைகளில் முஸ்லிம்கள் சார்பு யதார்த்தங்களும் உண்மைகளும் அண்மைக்காலங்களில் இப்படித்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
போர்த்துக்கேயர்களை இலங்கையை விட்டு விரட்டுவதற்காக, இலங்கை முஸ்லிம்களின் உதவியோடு மாயாதுன்னை அபோதைய கேரள சமோரிஸ் கலிகத் அரசரின் உதவியை நாடியதையோ, இல்லை அவர் மூன்று முஸ்லிம் தளபதிகளின் கீழ் ஒரு ஆயுதப்படையை (இராணுவம் என்று சொல்லுமளவில் பலம் பெற்றதல்ல) இலங்கைக்கு அனுப்பி வைத்ததையோ சமில லியனகே தனது உரையில் குறிப்பிடவில்லை. மட்டுமன்றி அதிக வரலாற்றுப் புத்தகங்களிலும் இதுபற்றி எழுதப்படவில்லை.
ஆயினும், அண்மையில் இயற்கையெய்திய வரலாற்றுப் பேராசிரியர் மட்டுமன்றி பெளத்த மதத்தைச் சார்ந்தவரான லோர்னா தேவராஜா இதுபற்றி தனது ஆய்வுப் புத்தகத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை வரலாற்றில் மாயாதுன்னை முஸ்லிம்களோடு தேசத்துக்காகப் போராடியவர் என்பதும், டொன் ஜுவான் தர்மபால சிங்களப் படையுடன் ஒன்று சேர்ந்து மாயாதுன்னவை அழிக்கப் புறப்பட்டவர் என்பது பல இடங்களில் இன்று மறுக்கப்பட்டாலும், முஸ்லிம்கள் மாயாதுன்னையுடன் இந்த தேசத்துக்காக உழைத்தவர்கள் என்பதும், முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுமிக்க சமூகம் என்பதும் நிரூபிக்கப்பட்டதொன்று.
இலங்கை சரித்திரத்தை உற்று அவதானிக்கும்போது, இந்நாட்டில் முஸ்லிம்கள் தேசப்பற்றுமிக்க கண்ணியவான்களாக வாழ்ந்திருப்பதை அவதானிக்க முடியும்.
ஜாமியா நளீமிய்யாவில் 1984ல் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற 05 நாள் ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் இது தொடர்பில் 1986ல் கலாநிதி சுக்ரியினால் தொகுத்து வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல் என்பனவும்,
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.சீ.எஸ் ஹமீட்டின் அயராத முயற்சியின் விளைவாக, 1994ல் பேராசிரியர் லோர்னா தேவராஜா எழுதி வெளியிட்ட இலங்கை முஸ்லிம்களும் 1000 வருட இன ஒற்றுமையும் என்ற புத்தகமும்,
கலாநிதி எஸ்.எச்.எம்.ஜெமீல் எழுதிய இலங்கை பாராளுமன்றில் முஸ்லிம்கள் என்ற நூல் மற்றும் லத்தீப் பாரூக் போன்றவர்களால் வெளியிடப்பட்டுவரும் ஆய்வுகள் இவற்றை மேலும் வலுப்படுத்துகின்றன.
தேசிய சரித்திரத்தில் பங்காற்றிய முஸ்லிம்கள் பற்றி மேலும் ஆராய விரும்புபவர்களுக்கு இவை சிறந்த உசாத்துணை நூல்களாக அமையும் என்பது திண்ணம்.
இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன ரீதியான சவால்களுக்கு பதில் கொடுக்ககூடிய ஆதாரங்களை மேற்படி புத்தகங்கள் உள்ளடக்கியுள்ளன. முஸ்லிம் சமூகம் இலங்கையை சூறையாட வந்தவர்கள் அல்ல: முஸ்லிம் சமூகம் கெளரவமான சமூகம் என்பதை இந்த ஆவனங்கள் மேலும் நிரூபிக்கின்றன.
மர்ஹூம் நளீம் ஹாஜியார் வெகு தூரநோக்குடன் சிந்தித்துச் செயற்பட்டதாலேயே அவரால் இப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க முடிந்தது.
ஜாதிக ஹெல உறுமயின் பேச்சாளர்கள், முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்து வெறும் 05 நூற்றாண்டுகள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் செயலாளர் கே.ஜே.விஜேதாச முஸ்லிம்கள் இந்நாட்டில் குடியேறி 07 நூற்றாண்டுகள் என்று அண்மைய ஞாயிறு பத்திரிகையொன்றில் எழுதியிருந்தார். உண்மை என்ன?
பிரபல சரித்திரப் பேராசிரியர் சில்வா கிரிபம்புவ, முஸ்லிம்கள் 600 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்நாட்டுக்கு வந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைய சூனியமான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்கள் பெருத்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளிவாயல்கள் உடைபடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. ஆக, முஸ்லிம்கள் இன்று பெரும்பான்மையினருடன் மிக அந்நியோன்னியமாகப் பழகி, அவர்களுக்கு தெளிவையும், உண்மையையும் ஊட்ட வேண்டியவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.
13ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டு இராணுவத்தில் அதிகம் உள்வாங்கப்பட்டிருந்ததாகவும், தற்போதைய இராணுவத்தில் முஸ்லிம்கள் குறிப்பிடக்கூடிய அளவு உள்வாங்கப்படவில்லை என்றும் குறை சொல்லப்படுகிறது.
இப்படி…. இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ராஜதந்திர விடயதானங்கள் மற்றும் உறவுகள், ஏற்றுமதி, இறக்குமதி, உள்ளூர் உற்பத்தித் துறைகளிலெல்லாம் ஆரம்ப காலம் முதல் முஸ்லிம்களும், மேமன் சமூகமும் அதிகம் ஈடுபட்டிருந்ததாக பேராசிரியர் லோர்னா தேவராஜா குறிப்பிட்டுள்ளார்.
12ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து 07 நெசவுத் தொழிலாளர்களை அழைத்து வந்து, இலங்கை தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்ததாகவும், அவர்களின் சந்ததியினர் இன்றும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் லோர்னா தேவராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று விவசாயத் துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய தேசிய பங்களிப்பு குறித்தும் பல ஆதாரங்கள் உள்ளன.
ஐந்தாம் நூற்றாண்டில் மன்னன் தாதுசேனவினால் கட்டப்பட்ட யோத வாவி, (முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு வந்து 300 வருடங்களுக்குப் பிறகும் நல்ல நிலைமயில் இருந்ததாகவும், முஸ்லிம்களே வெகு சிரத்தையோடு அதைப் பேணிப் பாதுகாத்ததாகவும் இலங்கையின் மூன்றாவது நீதியரசர் சேர்.அலெக்ஷாண்டர் ஜொன்ஸ்டன் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (இது 1200 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு).
நான் ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கடந்த 2008ல், பின் தங்கிய இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பிரதேச விவசாய நலன் கருதி, 450 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 25000 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் மற்றும் 110 மெ.மின்சாரத்தை ஈரானிடமிருந்து பெற்றுக் கொடுத்ததையும் இங்கு நினைவூட்டுவதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். அன்று மட்டுமன்றி இன்றும் இலங்கை முஸ்லிம்கள் தேசிய ரீதியாக தமது பங்களிப்புக்களை ஆற்றியே வருகின்றனர் என்பதை ஞாபகப்படுத்தவே இதை இங்கு குறிப்பிடுகின்றேன்.
மட்டுமன்றி, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு உட்பட்ட பல முஸ்லிம் நாடுகள் இலங்கையின் வளர்ச்சியும் நலனும் கருதி இன்றும் உதவிகள் செய்து வருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இதேபோன்று, இலங்கையின் சட்ட மற்றும் சட்டவாக்கத்துறையிலும் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்கு இலங்கையின் முதலாவது உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.ரீ.அக்பர் ஒரு உதாரண புருஷராகத் திகழ்கிறார்.
இலங்கையின் குற்றவியல் சட்டம் உட்பட்ட அரச ஊழியர் ஓய்வூதிய சட்டத்தைத் தயாரித்த நீதியரசர் அக்பர், இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்கிறதோர் பிரச்சினை முளைவிட்ட சமயம், அதற்கென அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைமை வகித்து, பேராதெனியவில் முதல் பல்கலைக்கழகம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) அமைக்க அரும் பாடுபட்டவர். இன்றும் பேராதனைப் பல்கலையில் அமையப்பெற்றிருக்கும் அக்பர் மண்டபம் அவர் பெயரை ஞாபகப்படுத்துகிறது.
இதேபோன்றுதான், பாப்புச்சி மரிக்காரும் இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிகு கட்டடங்களை அமைத்து தேசியத்துக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார். கொழும்பு அருங்காட்சியகம், பொது தபாலகம், காலிமுகத்திடலின் ‘கோல்ஃபேஷ் ஹோட்டல்’, விக்டோரியா என்பன இவரது கட்டடக்கலைப் பங்களிப்புக்கான சாட்சியங்கள்.
கட்டடக் கலையில் முஸ்லிம்கள்தான் முன்னணியில் இருந்தார்கள் என்பதற்கு எவரும் மறுதலிக்க முடியாத அளவில் நிரம்ப ஆதாரங்கள் உள்ளன. இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவின் புதிடில்லி முதல் சென்னை வரைக்குமான அழகான, கம்பீரமான கட்டடங்களை அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான்.
அத்துடன், 20ஆம் நூற்றாண்டில் இலங்கை தேசியத்துக்கான அறிஞர்களின் பங்களிப்பு தொடர்பில் ஒராபி பாஷா, நீதியரசர் எம்.ரீ.அக்பர். அறிஞர் சித்தி லெவ்வை, ஏ.எம்.ஏ.அசீஸ் ஆகியோரை ஈண்டு குறிப்பிடலாம்.
இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பில் பேசும்போது, கலாநிதி ரீ.பீ.ஜாயா, சேர்.ராசிக் பரீத், டாக்டர் எம்.சீ.எம்.கலீல், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஏ.சீ.எஸ்.ஹமீத் ஆகியோரை முன்னிலைப்படுத்தலாம்
இலங்கை தேசியத்துக்கான முஸ்லிம் தனவந்தர்களின் பங்களிப்பு எனும்போது, அப்துர் ரகுமான், பாப்புச்சி மரிக்கார், அப்துல் கபூர், மாக்கான் மாக்கார், நளீம் ஹாஜியார் மற்றும் மேமன் சமூகம் உட்பட்ட பலரை முதன்மைப்படுத்திக் குறிப்பிடலாம்.
ஆக, இலங்கையின் தேசியத்துக்கு பல்துறைகளிலும் முஸ்லிம்கள் பெயர் குறிப்பிடக்கூடிய அளவில், கெளரவமாகவும், கண்ணியமாகவும் தமது பங்களிப்புக்களை ஆற்றியிருப்பது நிரூபிக்கப்பட்ட விடயம்.
பொதுபலசேனாக்களும், சிங்கள அடிப்படைவாத மற்றும் பேரினவாத அமைப்புக்களும் குற்றம் சுமத்தும் அளவில்,இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவில் நடந்து கொண்டவர்களுமல்லர்.
1962ல் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கத்தோலிக்கப் பின்னணி சதி முயற்சியின்போதும் சரி, 1972 தென்னிலங்கை சிங்கள இளைஞர் புரட்சியின்போதும்சரி, 1989 தென்னிலங்கை சிங்கள பயங்கரவாத அட்டகாசத்தின்போதும் சரி,1976 துவக்கம் 2009 காலப்பகுதி வரைக்குமான தமிழீழ விடுதலைப் புலிகளின் நாட்டைப் பிரிக்கும் போராட்டத்தின்போதும் சரி முஸ்லிம்கள் இந்நாட்டின் ஜனாநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதில்லை என்பதே யதார்த்தமாகும். ((நிறைவு)
Thinakkural Weekly and Vidivelli Weekly

No comments:
Post a Comment